Saturday, August 1, 2015

மெத்தனம் வேண்டாமே ஆய வேண்டும்-இந்நிலை மேலும் தொடராது ஓய ஈண்டும்!


காந்திய வாதியாய் மதுவை நீக்க-வாழ்ந்த
காலமெலாம் போராடி உயிரைப் போக்க!
வாந்தியாய் இரத்தமே சிந்தி விட்டார்-செய்தி
வந்திட நல்லோரும் கண்ணீர் விட்டார்!
சாந்தமே உருவான சசிபெருமாள் இன்றே-மறவா
சரித்திர நாயகன் ஆனார் நன்றே!
ஏந்திய கொள்கையில் மாற்ற மில்லை- அதில்
எள்ளவும் தன்னலம் என்றும் இல்லை!


எத்தனை முறையோ உண்ணா விரதம்-அவர்
இருந்துமே பயனின்றி போன விதம்!
இத்தகை முடிவிக்கே அவரும் வந்தார்-அந்தோ
இன்னுயிர் தன்னையும் பலியாய் தந்தார்!
சித்தமே கலங்கிட துயரம் பொங்கும்-உடன்
சிந்தித்து செயல்பட வேண்டும் இங்கும்!
மெத்தனம் வேண்டாமே ஆய வேண்டும்-இந்நிலை
மேலும் தொடராது ஓய ஈண்டும்!

புலவர் சா இராமாநுசம்

18 comments :

  1. வருத்தமான செய்தி. மாற்றம் நிகழ வேண்டும்.

    ReplyDelete
  2. உடன் செயல்பாடு நல்ல விளைவினைத் தரும். தாமதம் மென்மேலும இழப்பைத்தரும்.

    ReplyDelete
  3. உடனே சிந்தித்து செயல்பட வேண்டும் ஐயா...

    ReplyDelete
  4. இந்நிலை
    மேலும் தொடராது ஓய ஈண்டும்!

    ReplyDelete
  5. ஆழ்ந்த இரங்கல்கள்! இந்த நிலை இனி எப்போதும் வராதிருக்க வேண்டும்!

    ReplyDelete
  6. வருத்தமான செய்தி ஐயா... அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்...

    ReplyDelete
  7. வருத்தம் தரும் செய்தி.
    த.ம.6

    ReplyDelete
  8. உறுதியான நடவடிக்கை எடுக்கப் படவேண்டிய தருணம் என்பதை உணர்த்திவிட்டிர்கள் ஐயா , என்ன நடக்கிறது என்று பார்ப்போம்

    ReplyDelete
  9. இந்நிலை
    மேலும் தொடராது ஓய ஈண்டும்!
    இதுவே அனைவரின் விருப்பம் ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
  10. சம்பந்தப்பட்டோர் சிந்திக்க மறந்தால்
    சந்ததியே அழிந்திடத் தான்
    வழி இதுவோ!

    புதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்!
    http://eluththugal.blogspot.com/2015/07/blog-post_28.html

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...