Saturday, August 29, 2015

பெண்ணே எரிந்து போனாயே-உயிர் பிரிந்து எங்கே போனாயோ?




                    பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி கடந்த 2011ம் ஆண்டு தீக்குளித்து  உயிர்நீத்த செங்காடியின் 4ம் ஆண்டு நினைவு தினம்!  செங்கொடியின்  நினைவஞ்சலியாக அன்று  நான் எழுதிய கவிதை                      

           மீள்பதிவு!

பெண்ணே எரிந்து போனாயே-உயிர்
   
பிரிந்து எங்கே போனாயோ!
விண்ணே நீயும் சென்றாயா-ஓடி
   
வேலூர் சிறையில் நின்றாயா!
கண்ணீர் வற்ற அழுகின்றார்-மக்கள்
   
கதறி துயரில் விழுகின்றார்!
 
எண்ணீர் மத்தியில் ஆள்வோரே-இனியே
   
எத்தனை உயிர்கள் மாள்வாரே!

 
வஞ்சம்  மட்டுமே உருவாக-மூவர்
     
வாழ்வைப் பறிக்கும் கருவாக!
 
நெஞ்சம் இரங்கா நிலைநன்றா-உயிரும்
    
நீங்கின் மீண்டும் வருமொன்றா!
 
தஞ்சம் அடைந்த  பறவைக்கும்-தனது
    
தசையைத் தந்தவன் தமிழனடா!
 
பஞ்சில் நெருப்பைக் கொட்டாதீர்-தீயும்
     
பற்றி எரியும் திட்டாதீர்!

 
முடிவை ஆவர்கள் எடுக்கட்டும்-நாமே
    
முடங்கியா விடுவோம் ஆகட்டும்!
 
அடங்கி நடக்கும் தமிழனுக்கு-பிறரை
    
அடக்கவும் தெரியும் தமிழனுக்கு!
 
திடமாய் முடிவு  எடுப்பாராம்-அவரே
    
தினமும் அறப்போர் தொடுப்பாராம்!
 
விடவே மாட்டோம் என்பாரா-வீணில்
    
விடத்தை அவரே தின்பாரா !

 
இனிமேல்  உயிர்பலி வேணாவே-இன்று
   
இழந்தோம் செங்கொடி வீணாவே!
 
குனியோம் எவர்கும் குட்டகுட்ட-என்ன
   
கோழையா நாமே தரைமுட்ட!
 
கனிவாய்ச் சொல்லியும் பயனில்லை-உயிரைக்
   
காக்க தமிழரே உடன்ஒல்லை!
 
துணிவாய் தொடங்கும் அறப்போரே-மூவரின்
   
தூக்குக்  கயிற்றை அறுப்பீரே!

புலவர்  சா  இராமாநுசம்


11 comments :

  1. அருமை ஐயா துயரத்தின் உச்சம்
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. மீள் பதிவு என்றாலும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  3. மீள் பதிவெனிலும் மனம் தொட்ட கவிதை ஐயா!

    த ம. 3

    ReplyDelete
  4. செங்காடியின் 4ம் ஆண்டு நினைவு அஞ்சலி அருமை ...
    செங்கொடி என்று திருத்தம் செய்யுங்கள் அய்யா !

    ReplyDelete
  5. மீள் பதிவு என்றாலும் நாங்கள் இப்போதுதான் வாசிக்கின்றோம்....மனம் தொட்ட வரிகள்!..

    ReplyDelete
  6. நினைவை விட்டு அகலா துயரம். கவி வரிகளால் அணையாதொரு அஞ்சலி தீபம்.

    ReplyDelete
  7. இனிமேல் உயிர்பலி வேணாவே-இன்று
    இழந்தோம் செங்கொடி வீணாவே!

    செங்காடியின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை அறிய தந்ததற்கு நன்றி! அய்யா...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...