Wednesday, August 5, 2015

நான்காவது பதிவர் சந்திப்பு மாநாட்டை நடத்த ஆலோசனைக் கூட்டம் அறிவிப்பு!



அன்பின் இனிய உறவுகளே! வணக்கம்!
முதற்கண் இவ்வாண்டு ,நான்காவது
பதிவர் சந்திப்பு மாநாட்டை நடத்த புதுக் கோட்டை மாவட்டம் முன் வந்துள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம் வரும்
அக்டோபர் மாதம்( 10 ,11 ,தேதிகள் ) என தற்போது திட்டமிடப் பட்டுள்ளது.அன்புத் தம்பியும் பிரபல பட்டிமன்ற பேச்சாளரும் ஆகிய,திருமிகு முத்து நிலவன் முன் வந்து பொறுப்பெடுத்து நடத்துகிறார் அதுபற்றி கலந்துரையாட அவரே நேரில்
இங்கு (அதற்காகவே ) வருகிறார்
 

எதிர் வரும் சனிக்கிழமை(8--8-2015) காலை பத்து மணி அளவில் கே-கே நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலசில் ,இக்கூட்டம் நடை பெறும்! அனைவரும் வருகை தர வேண்டுகிறேன்
இதற்கான அழைப்பு அனைவருக்கும் அன்புத் தம்பி அரசன்
அவர்கள் மின் அஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார்
படி, கீழே........

அனைவருக்கும்
இந்த வருட பதிவர் மாநாடு வருகிற அக்டோபர் மாதம் புதுக்கோட்டையில் நிகழ்த்த திட்டமிடப்பட்டிருக்கிறது, ஆகையால் ஏற்கனவே இரண்டு முறை நடத்திய அனுபவம் இருப்பதினால், சென்னை பதிவர்களாகிய நம்முடைய கருத்துக்களையும் அறிந்து கொள்ள திரு. முத்துநிலவன் அவர்கள் விரும்புகிறார். அதன்படி வருகிற சனிக்கிழமை - 08/08/2015 காலை 10 to 12 மணிக்கு டிஸ்கவரி புக் பேலசில் ஆலோசனைக் கூட்டம் நிகழ இருக்கிறது. நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது.

 புலவர்  சா  இராமாநும்

26 comments :

  1. மாநாடு வெற்றிப்பேற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாழ்க வாழ்க
    மானாடு சிறக்கட்டும்

    ReplyDelete
  3. முன்னேற்பாடுகள் தொடங்கி விட்டனவா!

    ReplyDelete
  4. புலவர் அய்யாவுக்கு வணக்கம். ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடந்திட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. ஆலோசனைக் கூட்டம் இனிதே நடந்திட வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. கூட்டம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. பதிவர் சந்திப்பு வெல்லட்டும்,உங்களின் துணையால் !

    ReplyDelete
  8. கூட்டம் சிறப்புற வாழ்த்துகள் ஐயா
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  9. வணக்கம்
    ஐயா
    நிகழ்வுசிறப்பாகஅமைய எனது வாழ்த்துக்கள் த.ம 8

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. பதிவர் சந்திப்பு சிறப்புற நடக்க எனது வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. சிறப்புற வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete

  12. ஐயா வணக்கம்!

    இன்று உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.

    http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post_6.html

    ReplyDelete
  13. கூட்டம் சிறக்கட்டும்
    வாழ்த்துக்கள் ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
  14. அய்யா வணக்கம். இந்த வயதிலும் அயராமல் கணினித்தமிழ்ப் பணியில் கலக்கும் நீங்கள்தான் எங்களுக்கு முன்னோடி!
    08-08-15 கூட்டத்தில் கலந்துகொள்ள தொடர்வண்டிப் பயணச் சீட்டு முன்பதிவு செய்துவிட்டேன். சென்னைதான் வலைப்பதிவர் சந்திப்பின் தொடக்கம் மற்றும் வழிகாட்டி. புதுக்கோட்டை நண்பர்கள் சென்னை நண்பர்களிடம் நிறைய்ய்யய எதிர்பார்க்கிறோம்... முன்னோடிகளை சிரம்தாழ்ந்து வரவேற்கக் காத்திருக்கிறோம். நேரில் பேசித் திட்டமிடுவோம். வணக்கம்

    ReplyDelete
  15. ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் ஐயா...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...