Wednesday, May 11, 2016

வாங்காதே வாங்காதே ஓட்டுக்குக் காசே-உந்தன் வருங்காலம் முழுவதும் நீங்காத மாசே !


வாங்காதே வாங்காதே ஓட்டுக்குக் காசே-உந்தன்
வருங்காலம் முழுவதும் நீங்காத மாசே
தாங்காதே தாங்காதே மேன்மேலும் துயரம் –அதனால்
தணியாது எரியாதோ மக்கள்தம் வயிறும்
ஏங்காதே பின்னலே விலைவாசி ஏறின்- என்றே
எண்ணியே தெளிவாக ஆராய்ந்து தேறின்
தூங்காது விழிப்போடு போடுவாய் ஓட்டே- நன்றே
தேர்தலில் உன்னுடை உரிமையாம் சீட்டே


புலவர் சா இராமாநுசம்

13 comments :

  1. வாக்காளர்கள் விழிப்புணர்வு பெற்றால் நல்லது அய்யா !

    ReplyDelete
  2. அருமையான விழிப்புணர்வு வரிகள் ஐயா....!!!

    ReplyDelete
  3. கடமையை நிறைவேற்றுவேன் ஐயா.

    ReplyDelete
  4. வாங்குவோம் நோட்டு - ஆனால் அதை வைத்துப் போடமாட்டோம் வோட்டு என்று சிலர் முணுமுணுக்கிறார்கள் ஐயா...!

    ReplyDelete
  5. அருமை ஐயா எல்லோரும் உணர வேண்டும்
    த.ம 5

    ReplyDelete
  6. எல்லோரிடமும் வாங்கிக் கொள்வோம் என்றும் நிறைய கேட்க முடிகிறது ஐயா.....

    ReplyDelete
  7. நல்லதொரு விழிப்புணர்வு பாடல்!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...