Friday, May 13, 2016

நடக்காத வாக்குறுதி பலவற்றைத் தருவார் –இன்றே நடக்கின்ற தேர்தலிலே வீடுதேடி வருவார் !



நடக்காத வாக்குறுதி பலவற்றைத் தருவார் –இன்றே
நடக்கின்ற தேர்தலிலே வீடுதேடி வருவார்
நடக்கின்ற வாக்குறுதி அதிலேசில உண்டே –அதையே
நன்றாக சிந்தித்து, செய்தக்கார் கண்டே
விடையாக யாரென்று நீர்காண வேண்டும் –அன்னார்
வெற்றிக்கு வழிதன்னை உள்ளத்தில் பூண்டும்
தடையின்றி தக்கதோர் வழிசெய்ய ஈண்டும் –யாரும்
தவறாமல் வாக்கினை வழங்கிட வேண்டும்!


புலவர் சா இராமாநுசம்

15 comments :

  1. நல்லதொரு ஆலோசனை வரிகள் நன்று ஐயா

    ReplyDelete
  2. நல்ல ஆலோசனை சொன்ன உங்களுக்கே ,த ம் வாக்களிக்க முடியவில்லையே அய்யா :)

    ReplyDelete
  3. வெற்றி !வெற்றி ! த ம வோட்டு விழுந்து விட்டது !

    ReplyDelete
  4. நல்ல ஆலோசனை.

    பகவான்ஜி கமெண்ட் புன்னகைக்க வைக்கிறது.

    ReplyDelete
  5. அழகான கவிதை வடிவில் நல்ல கருத்து . எளிய வாக்குறுதிகளையாவது நினைவில் வைத்திருக்கிறார்களா பார்க்கலாம்

    ReplyDelete
  6. தேர்தல் பணி ஆற்றஇருப்பதால்
    ஏற்கனவே வாக்களித்து விட்டேன் ஐயா
    தம +1

    ReplyDelete
  7. அருமையான கவி வரிகள் ஐயா...!!!

    ReplyDelete
  8. நல்லதோர் கவிதை. த.ம. +1

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...