Monday, May 9, 2016

பாதை மாறிப் போனால் பயணம் கெட்டுப் போகும்


பாதை மாறிப் போனால்
பயணம் கெட்டுப் போகும்-மிக்க
போதை ஏறிப் போனால்
புத்திக் கெட்ட தாகும்
தீதை நீக்க ஓட்டே
தேடி வரினும் கேட்டே -நீயும்
பேதை அல்ல காட்டே
பெறுவ தவலம் நோட்டே


புலவர் சா இராமாநுசம்

17 comments :

  1. உண்மை! உண்மை! அருமையாக சொன்னீர்கள்! நன்றி!

    ReplyDelete
  2. அருமை சவுக்கடி வார்த்தைகள் ஐயா
    தமிழ் மணம் முதலாவது

    ReplyDelete
  3. நோட்டு வாங்கினா அப்புறம் நொட்டைச் சொல்லகூட முடியாது :)

    ReplyDelete
  4. சுருக்கமாக சொன்னாலும் சுருக்கென்றும் நறுக்கென்றும் சொல்லிய விதம் அருமை ஐயா.

    கோ

    ReplyDelete
  5. உண்மைதான் ஐயா...!

    ReplyDelete
  6. நல்லதோர் புத்திமதி....

    ReplyDelete
  7. நியாயமாய்க் கிடைக்கவேண்டியவற்றை உரிமையாய்க் கேட்டுவாங்கும் துணிவில்லாமல் இலவசத்துக்கு அலையும் மனங்கள் இருக்கும்வரை இந்த அவலம் தொடரும். உண்மை ஐயா.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...