Saturday, May 14, 2016

இடையில் இருப்பது இருநாளே-மேலும் எண்ணில் தேர்தல் திருநாளே!



இடையில் இருப்பது இருநாளே-மேலும்
எண்ணில் தேர்தல் திருநாளே
தடையில் ஓட்டுப் போடுதலே- அன்றும்
தவறின் பின்னர் வாடுதலே
விடையில் கேள்வி ஆகிவிடும்-என்றும்
வேதனை மிகுதியாய் நோகவிடும்
படையுள் வீரரின் கைவாளாய் -வாக்கைப்
பயன்தர ஆவன செய்வீரே!


புலவர் சா இராமாநுசம்

12 comments :

  1. கடமையை ஆற்றுவோம் ஐயா.

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா
    காலம் உணர்ந்து கவியாக எழுதிய விதம் சிறப்பு ஐயா த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா !

    அனைவருக்கும் உண்டான எதிர்பார்க்கை நல்லதே நடக்கட்டும் ஐயா வாழட்டும் எம்மினம்

    ReplyDelete
  4. 570 கோடி பணம் கடத்தியவர்களுக்கு நிச்சயம் ஆப்புதான் அய்யா :)

    ReplyDelete
  5. 570 கோடி பணம் கடத்தியவர்களுக்கு நிச்சயம் ஆப்புதான் அய்யா :)

    ReplyDelete
  6. கடமையைத் தவறாது செய்ய வேண்டும். சரியாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...