Saturday, January 21, 2017

வரலாறு காணாத போராட்டம் கண்டீர் வருங்கால வரலாற்றில் தனியிடம் கொண்டீர்!

திரளான மாணவரின் பெருங்கூட்டம் தானே
திரட்டாத தன்னெழிச்சி வரநாட்டம் காணே
வரலாறு காணாத போராட்டம் கண்டீர்
வருங்கால வரலாற்றில் தனியிடம் கொண்டீர்
தரமான அறவழியே போராட்டம் போக
தம்நிகரும் இல்லையென அமைதிமிக ஆக
சரமாக மேன்மேலும் கூடுகின்றார் இங்கே
சரிசெய்ய முயலாத அரசுகளும் எங்கே?


புலவர் சா இராமாநுசம்

10 comments :

  1. உண்மையில் வரலாறு கண்டிராத போராட்டம் தான் ஐயா. கலாச்சாரத்தை அழிக்கும் முயற்சியை எதிர்த்து தமிழ் இளைஞர்கள் எழுச்சியுறும்போது எவர் வந்து அணை போடமுடியும்? வெற்றி அவர்களுக்கே!

    ReplyDelete
  2. மத்திய அரசை மண்டியிடச் செய்த இப்படை தோற்கின் எப்படை வெல்லும் :)

    ReplyDelete
  3. பகவான் ஜீ அதுவும் நோக்கமா

    ReplyDelete
  4. தமிழரின் அடையாளத்தையும் பண்பாட்டையும் ஒழுக்கமுடன் உலகிற்கு உறைக்கச் சொன்னவர்களை நாமும் பாராட்டுவோம்.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...