Wednesday, March 8, 2017

மகளிர் தின கவிதை!



ஏட்டளவில் சமஉரிமை மகளிர்க் கென்றே-சொல்லி
ஏழாண்டாய் ஏமாற்றி வருதல் ஒன்றே
நாட்டளவில் காணுகின்ற அவலம் இன்றே-நம்முடை
நாடாளும் மன்றத்தில் நடக்க நன்றே
வீட்டளவில் கூடசம உரிமை இல்லை-எனில்
வீணாக மகளிர்தினம் !எதற்குத் தொல்லை
பாட்டளவில் சொல்லுவதா துயரின் எல்லை-உலகில்
பாவையராய் பிறந்தாலே பல்வகைத் தொல்லை!


புலவர் சா இராமாநுசம்

5 comments :

  1. உண்மை நிலை ஐயா

    ReplyDelete
  2. அருமை ஐயா...

    இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள் - என்றும்...

    ReplyDelete
  3. பெண்ணாய்ப் பிறக்க மாதவம் செய்திருக்க வேண்டுமாமே

    ReplyDelete
  4. வணக்கம்
    ஐயா
    உண்மையின் யதார்த்தம்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...