Friday, April 28, 2017

ஏக்கமொடு எழுதுகின்றேன் இறைவா நீயும்-மனம் இறங்கிவந்து அருள்புரிய துயரம் மாயும்



ஏக்கமொடு எழுதுகின்றேன் இறைவா நீயும்-மனம்
இறங்கிவந்து அருள்புரிய துயரம் மாயும்
காக்கவொரு அரசில்லை இன்றே இங்கே -மக்கள்
கண்ணீரில் மிதப்பதன்றி வாழ்தல் எங்கே
ஆக்கமின்றி உள்ளதும் அழிந்து போக –நாளும்
அல்லல்பட்டு தீராது உயிரும் சாக
!நோக்கமெலாம் பணம்பதவி ஆட்சி என்றால் –ஆள்வோர்
நோக்குவரோ!? மக்கள்நலன்! இவ்வண்  சென்றால்


புலவர் சா இராமாநுசம்

7 comments :

  1. இறைவன்தான் காப்பாற்ற வேண்டும் ஐயா

    ReplyDelete
  2. it is on facebook now!
    அருமை அய்யா

    ReplyDelete
  3. ஆதங்கம் தான் மிஞ்சுகிறது..... :(

    ReplyDelete
  4. யாரைத்தான் நோகுவதோ

    ReplyDelete

  5. "நோக்கமெலாம் பணம்பதவி ஆட்சி என்றால் –ஆள்வோர்
    நோக்குவரோ!? மக்கள்நலன்! இவ்வண் சென்றால்" என
    நாட்டு நடப்பு, பாவினில் வந்து மோதக் கண்டேன்!

    ReplyDelete
  6. கடைசியில் கடவுளே கதி என்று வந்துவிட்டீர்களா? ஆனால், சின்னம்மாவிற்கும் தினகரனுக்கும் கூட, கடவுள் நம்பிக்கை இருக்கிறதே! அவர் யாரை போய் காப்பாற்றுவார்?

    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...