Tuesday, May 23, 2017

நன்றி அறிவிப்பு கவிதை!





ஆறுதலை அளித்திட்ட அனைவருக்கும்  நன்றிதனை
கூறுகின்றேன்  சரியென்று  குவித்தகரத்  தோடதனை
பேறுபெற பெருமைமிக பிறவியிலே முடிந்தவரை
ஊறுபெற எவரையுமே  உரைத்தில்லை  கடிந்தவரை

என்றே  வாழ்ந்திட்டேன் எண்ணத்தில் இறக்கும்வரை
நன்றே  வரைந்திடுவேன் நற்றமிழில்  சிறக்கவுரை
கற்றேன்  இயன்றவரை காணவில்லை  எல்லைதனை
உற்றேன்! உவகைதன்னை உறவுகளே வணங்குகிறேன்!

புலவர்  சா  இராமாநுசம்

11 comments :

  1. வணக்கம் ஐயா வாழ்க வளமுடன் நாளும் நலமுடன் வரட்டும் கவிதைகள்

    ReplyDelete
  2. தொடர வேண்டும் ஐயா... எங்களது அனைவரின் விருப்பம்...

    ReplyDelete
  3. எங்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாய் இப்படியே தொடரட்டும் அய்யா உங்களின் கவிதை :)

    ReplyDelete
  4. தொடருங்கள் ஐயா ..மிக்க சந்தோஷம்

    ReplyDelete
  5. பதிவில்தானே தொடர்பு. அது தொடர வாழ்த்துகள்

    ReplyDelete
  6. தொடருங்கள்.தொடர்பில் இருப்போம்

    ReplyDelete
  7. வாழ்க வளமுடன் அய்யா

    ReplyDelete
  8. அடடா இதை நான் கவனிக்காமல் இதுக்கு முந்தயதில் மின்னி முழக்கி விட்டேனே.. இத்தனைக்கும் காரணம் என் செகரட்டறியின் கவலையீனம்தேன்ன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. இந்த லிங்கை எல்லோ தந்திருக்கோணும்:)

    ReplyDelete
  9. இறைவன்
    தங்களுக்கு நீண்ட ஆயுளைத் தருவான்
    தங்கள் தமிழைத் தரணியெங்கும் பரப்ப
    தொடருங்கள் ஐயா!

    ReplyDelete
  10. நல்ல உடல் நலத்துடன்
    சிறந்த கவிதைகள் நாளும் தாங்கள் படைத்திட வேண்டும்
    என்பதே எங்களின் விருப்பம் ஐயா

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...