Friday, July 14, 2017

வடக்கிருந்து வருகிறதே ஊதக் காற்றும்-ஏதும் வாய்திறவா தமிழரசே உண்மை சாற்றும்





நடக்கிறதா  அரசுயென   தெரிய வில்லை-நாட்டில்
  நடப்பதென்ன  ஒன்றுமே   புரிய வில்லை!
முடங்கியதோ செயல் படுதல்  என்றே-குழப்பம்
  மனமுழுதும் தோன்றிவிட ஏனோ!  ஒன்றே
படச்சுருளாய் ஒடுதய்யா எண்ணத் திரையில்-நின்று
   பாழுமனம் தேடுதய்யா அந்தோ குறையில்
வடக்கிருந்து  வருகிறதே  ஊதக்   காற்றும்-ஏதும்
    வாய்திறவா தமிழரசே உண்மை  சாற்றும்

புலவர் சா  இராமாநுசம்

14 comments :

  1. அவரவர் தனது நாற்காலியை காப்பாற்றுவதே பெரும்பாடாக இருக்கிறதே ஐயா பாவம் அவர்களும் என்னதான் செய்வார்கள் ?

    ReplyDelete
  2. குழப்பமே வேண்டாம் ஐயா... முடங்கியே விட்டது...!

    ReplyDelete
  3. நம்மை அடிமைகள் ஆண்டுகொண்டிருக்கிறார்கள்!

    ReplyDelete
  4. வடக்கே இருந்து வரும் ஊதக்காற்றில் அரசே டித்துக் கொண்டு போகப்படும்

    ReplyDelete
  5. ஊதக் காற்றை இவர்களால் நீண்ட நாளைக்கு தாக்கு பிடிக்க முடியாதே :)

    ReplyDelete
  6. அரசு செயல்படுவதாகத் தெரியவில்லை. நல்ல மாற்றம் வேண்டும். என்று வருமோ.

    ReplyDelete
  7. வடக்கிருந்து வரும் ஊதக்காற்றே
    பதவிப் போதையில் இருப்போருக்கு
    தென்றலாய் சுகம் தருது
    நாம் வருந்தி என்ன செய்ய ?

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...