Tuesday, July 18, 2017

ஆடிப் பட்டம் தேடி விதை –என்று ஆன்றோர் சொன்னது பழைய கதை!






ஆடிப் பட்டம் தேடி விதை –என்று
ஆன்றோர் சொன்னது பழைய கதை
                   இன்று
வாடிய முகத்தொடு வற்றிட வயலும் -கண்டே
வருந்திடும் உழவன் நெஞ்சில் புயலும்
ஓடிட வாழ வழிதனைக் காண!-அவனது
உள்ளமோ பல்வகை எண்ணங்கள் பூண
தேடியே போனான்! தெளிவுடன்! முடிவாக-உழவுத்
தொழிலையே மறந்தான் !வேற்றூர் !விடிவாக


புலவர் சா இராமாநுசம்

4 comments :

  1. வேதனை வரிகள் ஐயா

    ReplyDelete
  2. வேதனையான உண்மை வரிகள் ஐயா...

    ReplyDelete
  3. ஆடி வருகிறது. உழவர்களுக்கு நன்மைகள் நாடி வருவதில்லை!

    ReplyDelete
  4. வேதனைதான் ஐயா! இப்போது மழையும் பொய்த்துவிட்டதே! தண்ணீர் பஞ்சமும் தலைவிரித்தாடுதே...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...