Sunday, October 8, 2017

முகநூல் பதிவுகள்!



அண்ணா தி மு க தற்போது
இரட்டை மாட்டு வண்டிபோல
ஆகிவிட்டது புதிய ஓட்டுனர் வந்து விட்டார்!
வண்டி இனி, எப்படி போகுமென பார்ப்போம்

இன்று தமிழ்நாட்டிலே முதல்வர் பதவிக்குத்தான் ஏகப்பட்ட
போட்டி! அடடா !பலபேர் அந்தக்
கனவிலேயே மிதக்கிறார்கள்! காரணம் அரசியலில் அமைச்சராக ,ஒரு தகுதி என்று ஏதும் இல்லை!கைநாட்டு கூட அமைச்சராகலாம்

உறவுகளே!
வரும் செய்திகளைப் பார்க்கும்
போது பி ஜே பி கட்சிக்குள் ஏதோ
குழப்பம் உள்ளது தெரிகிறது பிரதமர் மோடிக்கு
எதிராக குழு ஒன்று உருவாவதும் தெரிகிறது
விரைவில் மாற்றங்கள் வராது என்றாலும் அதற்கான வாய்ப்புகள்,அறுகுறிகள் தென்படுகின்றன!


நஞ்சுண்டவன் சாவான் என்று
சொன்னால்! நஞ்சுண்டவள்,,
சாவாளா என்று கேட்பவரை என்ன வென்று சொல்வது! அவள் மட்டுமல்ல, அவர்கள் ,அது ஆக அனத்தும் சாகும்!என்பது
தெரிந்தும் கேட்பது விதண்டா வாதம் தானே! இப்படித்தான் நாம் எழுதும் பதிவுகளில் மறுமொழியாக
சிலர் கேட்கிறார்கள்!


மைய, மாநில அரசுகள் , திட்டங்கள் தீட்டுவது நாட்டு
மக்களின் நன்மைக்கே என்பது தவறல்ல ! ஆனால் , அத்திட்டங்கள் நடைமுறையில் வெற்றியின்றி தோல்வி அடையுமானால் அதனை மாற்றிக் கொள்வதும் தவறல்ல ! அதனைஏதோ தங்கள் மானப் பிரச்சனை யா்க எண்ணுவது தான் தவறாகும்


புலவர்  சா  இராமாநுசம் 

6 comments :

  1. தர்மம் வெல்லும் ஐயா இதற்கு அவள், அவள், அது அனைத்தும் அடங்கும்
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. //அவன் அவள் அது// என்று படிக்கவும்

      Delete
  2. மாற்றம் நிகழட்டும் ஐயா
    தம +1

    ReplyDelete
  3. புலவர் அய்யா, சுருங்கச் சொன்னாலும் விளக்கமாகவே சொன்னீர்கள். மாற்றம் ஒன்றே மாறாதது. ஜெயலலிதா ஆடாத ஆட்டமா?

    ReplyDelete
  4. மாற்றம் நிகழ வேண்டும் ஐயா...
    அப்படியாகினும் ஏதேனும் நல்லது நடக்கிறதா பார்ப்போம்...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...