Sunday, February 25, 2018

வருகின்ற எதிர்காலம்! குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்



வருகின்ற எதிர்காலம்! குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து
வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம்
தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே
தடமறியா அரசேதான் நடத்தல் தொல்லை
கருவின்றி பிள்ளைபெற முயல்வோர் போன்றே-ஏதும்
கருதாது ஆட்சிதனை நடத்தல் சான்றே!
உருவின்றி நிழல்தேடும் காட்சி வீணே –மக்கள்
உணர்கின்ற நிலைவருமே விரைவில் காணே!

புலவர் சா இராமாநுசம்

புலவர் சா இராமாநுசம்

3 comments :

  1. தண்ணீர்ப்பஞ்சம் ஆட்சியாளர்களின் அரசியல் விளையாட்டு.

    ReplyDelete
  2. மக்கள் உணர்கின்ற நிலை நெருங்கிக் கொண்டே இருக்கிறது ஐயா

    ReplyDelete
  3. எதிர்காலம் இப்படித்தான் ஆகும் ஐயா.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...