Showing posts with label அவலம் பற்றி. Show all posts
Showing posts with label அவலம் பற்றி. Show all posts

Sunday, April 30, 2017

மெச்சவொரு ஆட்சிவரும் நாள்தான் என்றோ-உழவன் மேதினியல் மேன்மைகெட அழிதல் நன்றோ!?



உச்சநீதி மன்றம்வரை சென்றப் பின்பும்- எண்ணில்
உயிர்துறந்த உழவர்தமை மறைத்தல் துன்பம்
அச்மின்றி பொய்கூறிய தமிழக அரசே-இனியும்
ஆள்வதெனில் என்றென்றும் அழியா மாசே
பிச்சைதனை போடுவதாய் நடுவண் அரசும்-ஏதோ
பேருக்கு உதவியென தருவது பெரிசாம்
மெச்சவொரு ஆட்சிவரும் நாள்தான் என்றோ-உழவன்
மேதினியல் மேன்மைகெட  அழிதல் நன்றோ!?


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...