இதுவென் பதிவே கணக்கென அறியேன்
புதுமலர் போன்றே
பூத்திட காத்திட
மதுநிகர் மறுமொழி தந்தெனை வாழ்த்திட
நிதியெனத் தந்தவர்
நீங்களே ஆகும் !
என்னிரு கரங்களை என்றும் கூப்பியே
மன்னிய உலகில்
மன்னும் வரையில்
எண்ணியே தொழுவேன்
இணையில் உறவுமை
கண்ணின் மணியெனக்
கருதியே வாழ்வேன் !
சுயநலம் கருதா சொந்தங்கள் நீரே
பயனெதிர் பாரா
பண்பினர் நீரே
நயமது
மிக்க நண்பினர் நீரே
செயல்பட என்னைச்
செய்தவர் நீரே !
எண்பதைத் தாண்டியே ஆறென இருப்பதும்
உண்பதும் உறங்கலும்
உம்மிடை இருப்பதும்
என்புடை
தோலென என்னெடு இருப்பதும்
அன்புடை உம்மோர்
ஆதர வன்றோ !
இனியும் வாழந்திட என்வலை வருவீர்
கனியென இனித்திடக்
கருத்தினைத் தருவீர்
பனிமலர் போன்றே
குளுமையும் தோன்ற
நனிமிகு
நாட்களும்! வாழ்வேன் நன்றி!நன்றி!
புலவர் சா இராமாநுசம்

