எதுஊழல் எனஅறியார் மக்கள் என்றே- ஏனோ
எண்ணுவதோ ? எவர்வரினும் ஆள இன்றே!
இதுஊழல் என்றிடுவர் ஆட்சிக் கட்டில்-அவர்
ஏறிவிட்டால் மறுப்பாரே அதனை ஏட்டில்!
புதுஊழல் துறைதோறும் நாளும் தோன்றும்-உரிய
போக்குதனை கூறுகின்ற எந்த சான்றும்!
அதுஊழல் அல்லவென எடுத்துக் கூறும்-ஊடக
அவலங்கள் ஐயகோ என்று மாறும்!
புலவர் சா இராமாநுசம்

