Showing posts with label கவிதை புனைவு தனியார் பள்ளிகள் கட்டணம் தொல்லை. Show all posts
Showing posts with label கவிதை புனைவு தனியார் பள்ளிகள் கட்டணம் தொல்லை. Show all posts

Friday, May 11, 2012

பணிவாய்க் கேட்கிறோம் ஆள்வோரே-இன்னும் பாரா முகமேன் ஆள்வோரே!


தனியார் பள்ளிக் கொள்ளைகளே-மீண்டும்
   தாங்கிட இயலாத் தொல்லைகளே!
இனியார் எம்மைக் கேட்பாரே-இன்று
   எமக்கே உரிமையும் தந்தாரே!
அணியாய்த் திரண்டு வழக்கிட்டார்-நீதி 
    அவர்கே வெற்றி! முழக்கிட்டார்!
பணிவாய்க் கேட்கிறோம் ஆள்வோரே-இன்னும்
   பாரா முகமேன் ஆள்வோரே!


கொண்டதே கொள்கை என்கின்றார்-தாம்
    கூறுதல் வேதம் என்கின்றார்!
விண்டதேக் கட்டணம் என்கின்றார்-கேட்டால்
    விரட்டியே வெளியே தள்ளுகின்றார்!
தண்டமும் வேறு விதிப்பாரே-இதைத்
   தடுத்திட இயலா! பெற்றோரே!
கண்டிட வேண்டும் ஆள்வோரே-உடன்
   கண்டிக்க வேண்டும் ஆள்வோரே!


சேவையாய் கல்வியை பள்ளிகளே-எண்ணி
   செய்திட வேண்டும் பள்ளிகளே!
தேவையாம் பொருளென வழிதேடி-இப்படி
    தேடினால் வருமே பழிநாடி!
எழுத்தே தருபவன் இறைவன்தான்-என
   எழுதினர் நமது முன்னோர்தான்!
கழுத்தை நெறிப்பதா பள்ளிகளே-மேலும்
   கட்டணம் எரியும் கொள்ளிகளே!

                          புலவர் சா இராமாநுசம்
  

  

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...