Showing posts with label துயரம். Show all posts
Showing posts with label துயரம். Show all posts

Saturday, January 5, 2013

பழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –இதை, பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல் ஆகும்!




பழகிவிட்டால்  எல்லாமே  சரியாய்ப் போகும் இதை,
   பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல்  ஆகும்!
அழுதுகிட்டே  மீன்பிடிக்கும்  மீனவன்  போல -அவன்
   அல்லலுக்கு  விடிவுண்டா  என்றும்  சால!

பழகிவிட்டால்  எல்லாமே  சரியாய்ப் போகும் இதை,
   பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல்  ஆகும்!

பொழுதுமுட்ட  குடிக்கின்றான்   கவலை  அகல இல்லம்
   போனபின்னர்  அவன்செயலை  எடுத்துப்   புகல!
விழுதுகளாம்  பிள்ளைகளும்  மனைவி  என்றே படும்
    வேதனையை  விளக்குவதும்  எளிதும்  அன்றே!

பழகிவிட்டால்  எல்லாமே  சரியாய்ப் போகும் இதை,
   பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல்  ஆகும்!


                                             
நஞ்சுண்ட  விவசாயி  கண்டோம்  இன்றே வரும்
    நாட்களிலே  நடக்குமிது  காணும் ஒன்றே!
பஞ்சுண்டு  நெய்வதற்கும்  ஆலை யுண்டே ஆனா
    பலநாளாய்  மூடியது   அரசின்  தொண்டே!

பழகிவிட்டால்  எல்லாமே  சரியாய்ப் போகும் இதை,
   பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல்  ஆகும்!


கஞ்சுண்டு  வாழ்வதற்கும்  தொட்டி  கட்ட அரசு
     கருணையுடன்  மானியமே  நம்முன்  நீட்ட!
நெஞ்சுண்டு  நன்றிமிக  வாழ்வோம்  நாமே பெரும்
      நிம்மதியாய்  அஞ்சலின்றி  நாளும்  தாமே!

பழகிவிட்டால்  எல்லாமே  சரியாய்ப் போகும் இதை,
   பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல்  ஆகும்!
                       
                          புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, December 11, 2012

புத்தியில் அவருக்கு கோளாரே-புனித புத்தரே சொல்லினும் கேளாரே!




மீண்டும்  மீண்டும்  வருகின்றான்-நம்
     மீனவர் வலையை அறுக்கின்றான்!
 தூண்டில் மீனாய் துடிக்கின்றார்-நாளும்
     துயரக் கண்ணீர் வடிக்கின்றார்!
 ஈண்டும் ஆட்சி மாறியதே-ஆனால்
    எனினும் பழைய காட்சியதே!
 வேண்டும் துணிவு! அதுவொன்றே-அவர்
    வேதனை போக்கும்  வழியின்றே!


எத்தனை தரம்தான் போவார்கள்-சிங்ளர்
    எடுபிடி யாக  ஆவார்கள்!
மொத்தமாய் போய்விடும் தன்மானம்-அங்கே
    மேலும் போவது அவமானம்!
புத்தியில் அவருக்கு கோளாரே-புனித
     புத்தரே சொல்லினும் கேளாரே!
எத்தராம் சிங்களர் திருந்திடவே-அங்கே
    எதிர்க்க நம்படை நிறுத்திடுவீர்!


ஆறினால் சோறு பழஞ்சோறே-ஆளும்
   அம்மா   அவர்க்கும்   கதிநீரே!
கூறினால் மட்டும் போதாதே-அழுத்தம்
   கொடுப்பீர் மத்திக்கி, இப்போதே!
மீறினால் வருமே போராட்டம்-என
    மத்தியில் ஆள்வோர் உணரட்டும்!
மாறினால் அவர்கள் மாறட்டும்-இன்றேல்
    மக்களை அரசே திரட்டட்டும்!

பிடித்த மீனையும் அள்ளுகின்றான்-படகை
  பிணைத்து இழுத்துத் தள்ளுகின்றான்!
அடித்துச் சிறையிடல் தொடர்கதையா-இந்த
  அவலம் மீனவன்  தலைவிதியா!
தடுக்க மத்திக்கு வக்கில்லை-ஆளும்
  தமிழக அரசே உடன்ஒல்லை!
எடுக்க வேண்டும் நடவடிக்கை-ஒன்றாய்
  எதிர்போம் கச்சத்தீவின் உடன்படிக்கை!
    

           புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...