Sunday, November 27, 2011

வாரீர் உலகத் தமிழர்களே


 இன்றவர் பிறந்த ஒருநாளாம்-நல்
     ஈழ மக்கள் திருநாளாம்!
குன்றென கொண்ட மனத்திண்மை-அவர்
    குமுறும் எரிமலை நனிஉண்மை!
என்றுமே அவர்தான் மாவீரர்-மிக
    இனவெறி சிங்களக்கொடும் பாவிநீர்
ஒன்றே ஒன்றாம்  உணர்வீரே-அவர்
    ஒருநாள் மீண்டும் வருவாரே

வீரம் என்றும் அழிவதில்லை-மா
     வீரர் அழிந்தது மெய்யில்லை!
நேரம் வரும்போ துலகறியும்-அந்த
      நிலமை எதிர்நாள்! அதுதெரியும்!
ஆரம் சூட்டி வரவேற்கும்-மா
    அகிலம் போற்ற புகழ்சேர்க்கும்
வாரீர் உலகத் தமிழர்களே-மா
     வீரரை வாழ்த்துவோம் வாழ்கயென
     
          புலவர் சா இராமாநுசம்

14 comments :

  1. மாவீரர் திருநாள் வீர வணக்கம் ....

    ReplyDelete
  2. நிச்சயம் வருவார்

    மாவீரர் தின வணக்கங்கள்

    ReplyDelete
  3. நல்லா இருக்கு கவிதை அண்ணே நன்றி!

    ReplyDelete
  4. வீரரை வாழ்த்துதல் மூலம்
    வீரம் பெறுவோம்
    அருமையான படைப்பு
    வாழ்த்துக்கள்
    த.ம 2

    ReplyDelete
  5. என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா ,

    த.ம 4

    ReplyDelete
  6. இன்குலாப் ஜிந்தாபாத்

    ReplyDelete
  7. சரியான வார்த்தைகள் அய்யா!

    ReplyDelete
  8. வீரம் என்றும் அழிவதில்லை-மா
    வீரர் அழிந்தது மெய்யில்லை!
    அருமை ஐயா..

    ReplyDelete
  9. தமிழனை வாழ்த்துவோம்
    சிங்களவனை வீழ்த்துவோம்..

    ReplyDelete
  10. மாவீரரை வாழ்த்தி வணங்குவோம்!

    ReplyDelete
  11. தியாகச் சுடர்களை வாழ்த்தி வணங்குவோம்....

    ReplyDelete
  12. எம் கல்லறைத் தெய்வங்களை வணங்கித் தொழுவோம்.கைகோர்த்த உணர்வுக்கு நன்றி ஐயா !

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...