Wednesday, June 20, 2012

ஏனோ தொடங்கினேன் வலைப்பூவே!

    ஏனோ தொடங்கினேன் வலைப்பூவே-பலவும்
    எழுதிட நாளும் களைப்பாவே!
    தேனாய் இனித்தது தொடக்கத்தில்-ஏதும்
    தேடுத லின்றி இதயத்தில்!
    தானாய் வந்தது அலைபோல-இன்று
    தவியாய் தவிக்குதே சிலைபோல!
    வானாய் விரிந்திட சிந்தனைகள்-கவிதை
    வடித்தால் வருஞ்சில நிந்தனைகள்!  

    உண்ணும உணவும் மறந்தாச்சே-அந்த
    உணவின் சுவையும் துறந்தாச்சே!
    எண்ண மெல்லாம் வலைப்பூவே-பொழுதும்
    எழுதத் தூண்டின தலைப்பூவே!
    போதை கொண்டவன் நிலையுற்றேன்-நாளும்
    புலம்பும் பயித்திய  நிலைபெற்றேன்!
    பொழுதும் சாய்ந்தே போனதுவே-களைப்பில்
    புலவன் குரலும் ஓய்ந்ததுவே!

    பாதி இரவில் எழுந்திடுவேன்-உடன்
    பரக்க பரக்க எழுதிடுவேன்!
    வீதியில் ஒசைவந்தவுடன்-அடடா
    விடிந்த உணரவும் வந்திடிமே!
    தேதி கேட்டால தெரியாதே-அன்றைய
    தினத்தின் பெயரும் தெரியாதே!
    காதில் அழைப்பது விழுந்தாலும-என்
    கவன மதிலே செல்வதில்லை!

    படுத்த படியே சிந்திப்பேன்-என்
    பக்கத் தில்பேனா தாளுமே!
    தொடுக்க நெஞ்சில் இருவரிகள்-வந்து
    தோன்றும் ஆனல் நிறைவில்லை!
    அடுத்த வரிகள் காணாதாம்-அந்தோ
    அலையும் நெஞ்சே வீணாதாம்!
    எடுத்த பாடல் முடியாதாம்- எனினும்
    ஏனோ  இதயம் ஒயாதாம்!

    அப்பா  வேதனை ஆப்பா-தினம்
    ஆனது என்நிலை பாரப்பா
    தப்பா-?  தொடங்கின வலைப்பூவே-நெஞ்சம்
    தவிக்க எண்ணம் சலிப்பாவே!
    ஒப்பா யிருந்ததே என்னுள்ளம்-தேடி
    ஓடுமா சிந்தனைப் பெருவெள்ளம்
    இப்பா போதும் முடியப்பா-சோர்வு
    எழவே தொடரா படியப்பா!

              புலவர் சா இராமாநுசம்

42 comments :

  1. அருமையான கவிதை புனைவு ஐயா..உங்களுக்கும் வலைப்பூவுக்குமான உறவையும் உங்கள் தினம் நகரும் விதத்தையும் கவிதை விளக்குகிறது..

    "உண்ணும உணவும் மறந்தாச்சே-அந்த
    உணவின் சுவையும் துறந்தாச்சே!
    எண்ண மெல்லாம் வலைப்பூவே-பொழுதும்
    எழுதத் தூண்டின தலைப்பூவே"

    அருமை ஐயா..

    ReplyDelete
  2. இன்று தங்களைப் பற்றி என் வலைத்தளத்தில் எழுத நேர்ந்தது. ஆச்சர்யம் வலைத்தளத்தைப் பற்றியே ஒரு கவிதை. இப்போது உணர்கிறேன், என்பதிவில் நான் இட்ட கருத்துக்கள் எள்ளவும் பொய்யில்லையென்று.

    எடுத்த பாடல் முடியாதாம்- எனினும்
    ஏனோ இதயம் ஒயாதாம்!

    வாழ்த்த வயதில்லை, வார்த்தைகளும் வரவில்லை.

    ReplyDelete
  3. வலைப்பூக்களில் பதிவெழுதும் பலரின் நிலையும் இது தான் புலவரே... இந்நிலையை அழகிய கவிதை மூலம் சொல்லி அசத்திட்டீங்க!

    நானும் இன்று காலை “மகிழ்ச்சித் தீயும் சிரிப்பொலியும்” என பதிவொன்று எழுதி உள்ளேன். நிறைய பேர் படிக்கவில்லை எனப் பார்த்தபோது, தொடர்பவர்களின் டேஷ்போர்டில் அப்டேட் ஆகவில்லை எனத் தெரிந்தது. :)

    http://www.venkatnagaraj.blogspot.in/2012/06/blog-post_13.html

    ReplyDelete
  4. வலைப்பூவினுடனான
    உங்களின் உறவை உணர முடிந்தது வரிகளில்

    அருமை அய்யா

    ReplyDelete
  5. உண்ணும உணவும் மறந்தாச்சே-அந்த
    உணவின் சுவையும் துறந்தாச்சே!
    எண்ண மெல்லாம் வலைப்பூவே

    அழகாகச் சொன்னீர்கள் புலவரே..

    சொந்த வலைப்பதிவு என்பது இன்று பலருக்கு சொந்த வீடு போலத்தான் இருக்கிறது.

    இன்பதுன்பங்கள் என எந்த சூழ்நிலையிலும் வலையை மறப்பதில்லை..

    ReplyDelete
  6. // தேனாய் இனித்தது தொடக்கத்தில்-ஏதும்
    தேடுத லின்றி இதயத்தில்!
    தானாய் வந்தது அலைபோல-இன்று
    தவியாய் தவிக்குதே சிலைபோல! //
    அய்யா வலைப்பூவையே நினைத்துக் கொண்டிராமல் கொஞ்சம் குடும்பத்தாரோடும் உறவாடுங்கள்! உடல் நிலையையும் கவனியுங்கள்! தினமும் எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கருத்துரைகளில் கொஞ்சம், எழுதுதல் கொஞ்சம் என்று இருங்கள். எல்லாம் சரியாகி விடும். எனது அனுபவம் இது!

    ReplyDelete
  7. ஐயா நீங்களே இப்படி சலித்தால் எப்படி...:(

    ReplyDelete
  8. அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் பதிவர்கள் படும் கஷ்டத்தை...:(....இது உங்களைப் போன்ற அனுபவசாலிகளால்தான் முடியும்.

    தொடர்ந்தும் சலைக்காமல் எழுத இந்த பின்னூட்டத்தை உரமாக சமர்ப்பிக்கிறேன்,,,,த ம ஓ 6

    ReplyDelete
  9. அருமை.. . எனக்கும் மட்டும் தாணு நினைச்சேன் ... எல்லாருக்குமா.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. தப்பே இல்லை உம்செயலில்
    தமிழும் மகிழ்வாள் உம்கவியில்!
    உப்பே இல்லாப் பண்டகமாய்
    உலகில் இருந்தும் என்னபயன்?
    நட்பை வளர்க்கும் வலைப்பூவால்
    நாளும் சேறும் சொந்தங்கள்!
    இப்பூ வாழ்வே இன்பமென
    இனிக்கத் தொடர்ந்து எழுதிடுக!

    ReplyDelete
  11. புலம்பல் அற்புதம்.. :-)

    ReplyDelete
  12. பதிவெழுதும் பலரின் நிலையும் இது தான் புலவரே...

    ReplyDelete
  13. வலைபூ எழுதும் ஒவ்வொருவரின் மண நிலையையும் ஒரு கவிக்குள் கொண்டு வந்த விதம் அருமை தமிழ்ப் புலவரே


    படித்துப் பாருங்கள்

    சென்னையில் ஓர் ஆன்மீக உலா

    ReplyDelete
  14. வலைப்பூ வைத்திருப்போர் அனைவரது நிலையும் இதுதான் போல :)

    த.மா.ஓ 8

    ReplyDelete
  15. வலைப்பதிவர்கனின் மனக்குரலாய் உங்களின் குரல் ஒலித்திருக்கிறது. அருமை.

    ReplyDelete
  16. அப்பா வேதனை ஆமப்பா-தினம்
    ஆனது என்நிலை பாரப்பா
    தப்பா-? தொடங்கின வலைப்பூவே-நெஞ்சம்
    தவிக்க எண்ணம் சலிப்பாவே!

    ஐயா என் உள்ளுணர்வுகளை உங்கள் வரிகளில் கண்டேன் .

    ReplyDelete
  17. எல்லாப்பதிவர்களின் நிலையும் இதுதான் ஐயா!நான் இனி வாரம் இரண்டு நாட்களாவது வலைப்பூவுக்கு விடுமுறை விடலாம் என எண்னியிருக்கிறேன்!(இது வரை பல முறை அவ்வாறு எண்ணியிருக்கிறேன்!!)

    ReplyDelete
  18. உங்களின் உணர்வே எங்களுடையதும்.

    ReplyDelete
  19. AROUNA SELVAME
    தப்பே இல்லை உம்செயலில்
    தமிழும் மகிழ்வாள் உம்கவியில்!
    உப்பே இல்லாப் பண்டகமாய்
    உலகில் இருந்தும் என்னபயன்?
    நட்பை வளர்க்கும் வலைப்பூவால்
    நாளும் சேறும் சொந்தங்கள்!
    இப்பூ வாழ்வே இன்பமென//

    இவருடைய கருத்தே என் கருத்தும்
    மனம் கவர்ந்த கவிதைக்கு
    மனமார்ந்த நன்றி


    இனிக்கத் தொடர்ந்து எழுதிடுக!

    ReplyDelete
  20. மதுமதி said...

    மிக்க நன்றி

    சா இராமாநுசம்

    ReplyDelete
  21. முஹம்மது யாஸிர் அரபாத் said.

    மிக்க நன்றி

    சா இராமாநுசம்

    ReplyDelete
  22. வெங்கட் நாகராஜ் said.

    மிக்க நன்றி

    சா இராமாநுசம்

    ReplyDelete
  23. செய்தாலி said...

    மிக்க நன்றி

    சா இராமாநுசம்

    ReplyDelete
  24. முனைவர்.இரா.குணசீலன் said...


    மிக்க நன்றி

    சா இராமாநுசம்

    ReplyDelete
  25. தி.தமிழ் இளங்கோsaid...

    மிக்க நன்றி

    சா இராமாநுசம்

    ReplyDelete
  26. சிட்டுக்குருவி said...


    மிக்க நன்றி

    சா இராமாநுசம்

    ReplyDelete
  27. சிட்டுக்குருவி said...


    மிக்க நன்றி

    சா இராமாநுசம்

    ReplyDelete
  28. ராசை நேத்திரன்said...

    மிக்க நன்றி

    சா இராமாநுசம்

    ReplyDelete
  29. AROUNA SELVAME said

    மிக்க நன்றி

    சா இராமாநுசம்

    ReplyDelete
  30. சின்னப்பயல்said...

    மிக்க நன்றி

    சா இராமாநுசம்

    ReplyDelete
  31. ரெவெரி said

    மிக்க நன்றி

    சா இராமாநுசம்

    ReplyDelete
  32. சீனுsaid...


    மிக்க நன்றி

    சா இராமாநுசம்

    ReplyDelete
  33. வரலாற்று சுவடுகள் said...

    மிக்க நன்றி

    சா இராமாநுசம்

    ReplyDelete
  34. Seeni said...


    மிக்க நன்றி

    சா இராமாநுசம்

    ReplyDelete
  35. பா.கணேஷ் said...


    மிக்க நன்றி

    சா இராமாநுசம்

    ReplyDelete
  36. Sasi Kalasaid...

    மிக்க நன்றி

    சா இராமாநுசம்

    ReplyDelete
  37. சென்னை பித்தன் said...



    மிக்க நன்றி

    சா இராமாநுசம்

    ReplyDelete
  38. வே.நடனசபாபதிsaid...

    மிக்க நன்றி

    சா இராமாநுசம்

    ReplyDelete
  39. Ramani said...


    மிக்க நன்றி

    சா இராமாநுசம்

    ReplyDelete
  40. Ramani said...


    மிக்க நன்றி

    சா இராமாநுசம்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...