Friday, September 12, 2014

கொலைகொள்ளை நடக்காத நாளே இல்லை –இந்த கொடுமைக்கு, விடிவுவர உண்டா எல்லை!


கொலைகொள்ளை நடக்காத நாளே இல்லை –இந்த
கொடுமைக்கு, விடிவுவர உண்டா எல்லை!
கலையெனவே கொலைகூட ஆயிற் றிங்கே –கயவர்
கைக்கூலி, பெறுகின்றார் கருணை எங்கே!?
நிலைகுலைந்து வாழ்கின்றார் மக்கள் நாளும்-சற்றும்
நிம்மதியே இல்லாமல் அச்சம் மூளும்
வலைவீசி தேடுவதாய் காவல் துறையும் –செய்தி
வருகிறது! என்னபயன்! எப்படிக் குறையும்!?

பொதுமக்கள் ! நமக்குமிதில் பொறுப்பு வேண்டும்-வீட்டைப்
பூட்டிவிட்டால் , போதாது காக்க ஈண்டும்!
எதுவீட்டில் வைப்பதென எண்ண வேண்டும்-அதற்கு
ஏற்றவழி என்னவெனக் ஆய்வீர் யாண்டும்!
முதுமக்கள் தனித்திருப்பின் , காவல் துறைக்கே-நாமே
முறையாக தெரிவிப்போம்! குற்றம் தவிர்க்க!
இதுபோல ,மேலும்சில நாமும் செய்வோம் –ஏதோ
இயன்றவரை நமைக்காக்க முயலின்! உய்வோம்!

புலவர் சா இராமாநுசம்

9 comments :

  1. முதுமக்கள் தனித்திருப்பின் , காவல் துறைக்கே-நாமே
    முறையாக தெரிவிப்போம்! குற்றம் தவிர்க்க////
    அவசியமான அறிவுரை எல்லோருக்கும் பொருந்தும்

    ReplyDelete
  2. உங்களின் ஆலோசனைகளை கடைபிடித்தால் தப்பிக்கலாம் அய்யா !
    த ம 2

    ReplyDelete
  3. அருமையான அறிவுரை! நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ளவிடில் காவல் துறையால் ஒன்றுமே செய்யமுடியாது!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...