Monday, January 12, 2015

கட்டிய நாய்கூட எட்டிப் பாயும் கால்பட்டால் எறும்புகூட கடித்தே மாயும்


ஈழத்துத் தமிழர்களின் ஓட்டைப் பெற்றீர்
இலங்கைக்கு அதிபரென பதவி உற்றீர்
வாழத்தான் அன்னவரும் வாக்குத் தந்தார்
வருகயென வரவேற்று திரண்டு வந்தார்
கூறத்தான் இயலுமா பட்டத் துயரம்
கொள்ளையென போயிற்றே எண்ணில் உயிரும்
மாறத்தான் செய்வீரே அதிபர் நீங்கள்
மன்றாடி கேட்கின்றோம் ஐயா நாங்கள்!


கட்டிய நாய்கூட எட்டிப் பாயும்
கால்பட்டால் எறும்புகூட கடித்தே மாயும்
வெட்டியநல் மரம்போல் வீழ்ந்தார் அந்தோ
வேதனையில் நாள்தோறும் துடித்தார் நொந்தே
பட்டியிலே மாடுகளை அடைத்தல் போல
பசியாலே துடித்தவர்கள் முடிவில் மாள
எட்டியென கசந்திட்ட வாழ்வு போதும்
இனியேனும் இனிக்கட்டும் விலக தீதும்!

புலவர் சா இராமாநுசம்

21 comments :

  1. //கட்டிய நாய்கூட எட்டிப் பாயும்
    கால்பட்டால் எறும்புகூட கடித்தே மாயும்//
    உணர்வை வெளிபடுத்தும் அற்புதமான வரிகள்.இனிமேலாவது தமிழர்களின் நிலை மாறினால் மகிழ்ச்சி

    ReplyDelete
  2. அருமை! இலங்கை மக்களின் துயரம் இனியாவது தீரட்டும்!

    ReplyDelete
  3. இனியெனும் துயர் தீரட்டும்....
    தமிழ் மணம் 3

    ReplyDelete
  4. இனியேனும் நல்லது நடக்கட்டும்......

    த.ம. 4

    ReplyDelete
  5. நல்லதே நடக்கட்டும்.
    அருமை அய்யா!

    ReplyDelete
  6. எட்டியென கசந்திட்ட வாழ்வு போதும்
    இனியேனும் இனிக்கட்டும் விலக தீதும்!

    அருமை புலவர் ஐயா.

    ReplyDelete
  7. இனி நல்லதே நடக்க வேண்டும் என்று நம்புவோம் ஐயா...

    ReplyDelete
  8. நமது நம்பிக்கை பொய்க்காது என்று நம்புவோம் !

    ReplyDelete
  9. நல்லதே நடக்கும். நம்புவோம் ஐயா.

    ReplyDelete
  10. நல்லதே நடக்கும் என நம்புவோம் ஐயா...
    தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
    கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
    தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
    பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
    எனது மனம் நிறைந்த
    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...