Monday, August 29, 2016

இந்தியா என்பதொரு நாடாம்-என்ற எண்ணத்தால் வந்ததே கேடாம்!

இந்தியா என்பதொரு நாடாம்-என்ற
எண்ணத்தால் வந்ததே கேடாம்
வந்திடும் நீரெல்லாம் முற்றும்-நதியில்
வாராது தடுத்திட சற்றும்
சிந்தனை செய்வது சரியா-நாளும்
செயல்பட முனைவது முறையா
நிந்தனை செய்வதா எம்மை-நாங்கள்
நீரின்றி சாவதா செம்மை!?


புலவர் சா இராமாநுசம்

7 comments :

  1. மத்தியில் ஆள்வோர் உங்களின் ஆதங்கத்தை புரிந்து கொண்டால் நல்லது !

    ReplyDelete
  2. ஒவ்வொரு மாநிலமும் பொறுப்புணர்ந்து நடக்க வேண்டும். பகையை வளர்க்கிறார்கள் அரசியல்வியாதிகள்.

    ReplyDelete
  3. அவர்தாம் தாங்குகின்றார் தம் மக்களுக்காகவே
    இவர்தாம் தூங்குகின்றார் "தம் மக்களைக்" காக்கவே
    மக்களும் ஆயினர் மாக்களாகவே.
    வாங்கினர் காசுபணம் ஓட்டுக்காகவே
    விஜயன்.

    ReplyDelete
  4. அனைவரின் ஆதங்கமும் இதுதான்
    அழகான கவிதையாக
    அதைப் பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அதிகாரம் இருப்பவர்களுக்கு அக்கறையில்லை.
    அக்கறை இருப்பவர்களுக்கு அதிகாரம் இல்லை.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...