Sunday, January 1, 2017

பாங்காக இட்டபயிர் கருகிப் போக-தினம் பாடுபட்ட விவசாயி உள்ளம் வேக!


பாங்காக இட்டபயிர் கருகிப் போக-தினம்
பாடுபட்ட விவசாயி உள்ளம் வேக
தாங்கொணா துயரத்தால் இரண்டே நாளில்-அந்தோ
தன்னுயிரைத் பதினெட்டு பேரும் தந்தார்
ஆங்கிலப் புத்தாண்டே அடுக்கும் செயலா-உந்தன்
ஆரம்பம் இதுவானால் வாழ்வே புயலா
தீங்கின்றி நீசெல்ல தூண்டு கின்றோம்-காக்க
தெய்வத்தை மறவாது வேண்டு கின்றோம்!


புலவர் சா இராமாநுசம்

11 comments :

  1. புது ஆண்டிலும் கூட பிரச்சினைத் தீர்வதாக தெரியவில்லையே அய்யா :(

    ReplyDelete
  2. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. உழுதுண்டு வாழ்வோரிடம் யாரும் தொழுதுண்டு செல்வதாகத் தெரியவில்லையே ஐயா. என்று மாறும் இந்த வேதனை?
    புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. சிரமம் தான் ஐயா...

    ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  5. மழையும் ஏமாற்றுகிறது.

    ReplyDelete
  6. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. தொடரும் சோகம்... புத்தாண்டிலும்....

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. புத்தாண்டிலாவது நிலை சீராகும் என நம்புவோம் ஐயா.

    ReplyDelete
  9. தங்கள்1கவிதையை2சற்றே3இடைவெளிக்குப்பின்4வாசிக்கிறேன்5கருத்து6கவலையளித்தாலும்7கவிதையின்8திறன்9மகிழ்ச்சி8அளிக்கிறது.

    ReplyDelete
  10. தங்கள்1கவிதையை2சற்றே3இடைவெளிக்குப்பின்4வாசிக்கிறேன்5கருத்து6கவலையளித்தாலும்7கவிதையின்8திறன்9மகிழ்ச்சி8அளிக்கிறது.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...