Thursday, May 25, 2017

காட்டில் காய்ந்த நிலவாக





காட்டில்  காய்ந்த  நிலவாக
    கடலில்  பெய்த   மழையாக-தமிழ்
நாட்டில்  நடக்கும்  ஆட்சிதனை
    நாளும்  நடக்கும்  காட்சிதனை-தினம்
ஏட்டில் வந்திடும்   செய்திகளே
    எடுத்துக்  காட்டிட  உய்தியிலே! அதனை
பாட்டில் இங்கே  கூறிவிட்டேன்
    படித்திட  பலரும்  முடித்துவிட்டேன்

புலவர்  சா  இராமாநுசம்

16 comments :

  1. இன்னும் எத்தனை நாளோ இந்த அலங்கோலம் :)

    ReplyDelete
  2. வேதனைதான் நம் நாட்டு நிலை தற்போது :(

    ReplyDelete
  3. மாற்றம் மக்கள் மனதில் உள்ளது ஐயா

    ReplyDelete
  4. இதுவும் கடந்து போகும்
    காத்திருப்போம்
    வேதனையை கவிதையாய்ப்
    பதிந்த விதம் அருமை
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  5. நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள்!

    ReplyDelete
  6. அனைத்தும் ஒரு நல்ல முடிவுக்கு வரும்... வர வேண்டும்...

    ReplyDelete
  7. ஆட்சியா? இங்கேயா? வெறும் காட்சிகள்தான் அனுதினமும்!

    ReplyDelete
  8. காத்திருப்போம்
    காலம் பதில் சொல்லும் வரை

    ReplyDelete
  9. குரங்கு பூமாலையாய் தமிழகம்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...