Monday, July 24, 2017

கண்ணென வளர்க்கும் நாள்போலும்-என்றும் கவிதைகள் தந்திட மேன்மேலும்




உண்ணும் உணவா உறவுகளே-என்னை
உங்கள் மறுமொழி வரவுகளே
கண்ணென வளர்க்கும் நாள்போலும்-என்றும்
கவிதைகள் தந்திட மேன்மேலும்
திண்ணம் இதுவென நம்புங்கள்-உணர்ந்து
தெளிவீர் எனக்கது தெம்புங்கள்
எண்ணம் பல்வகை தோன்றிடுமே-அதனால்
எழுத்தில் மனமது ஊன்றிடுமே!


புலவர் சா இராமாநுசம்

9 comments :

  1. அருமை ஐயா எங்கள் வரவு என்றும் உண்டு.
    த.ம.பிறகு

    ReplyDelete
  2. தங்களின் கவிதைகளுக்காக நாள்தோறும் காத்திருப்போம் ஐயா

    ReplyDelete
    Replies
    1. நன்றி எனக்கு மதிப்பெண்(ஓட்டு)அளிக்கவில்லையே!சிக்கலா!

      Delete
  3. உங்களின் ஆக்கத்துக்கு என்னோட ஊக்கம் என்றும் உண்டு அய்யா :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி எனக்கு மதிப்பெண்(ஓட்டு)அளிக்கவில்லையே!சிக்கலா!

      Delete
  4. மென்மேலும் கவிதை படைக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. தினம் தினம் உங்கள் கவிதை வெளிவரட்டும். படித்திட நாங்களும் காத்திருப்பில்....

    ReplyDelete
  6. கவிதை எழுத வராது என்று எண்ணிசோர்ந்திருந்த எனக்கு நான் எழுதுவதும் கவிதைதான் என்றூ ஊக்கம் கொடுத்தவர் அல்லவா நீங்கள் உங்களை எண்ணி வியக்கிறேன்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...