Showing posts with label இளைய சமுதாயம் ஒருதலை. Show all posts
Showing posts with label இளைய சமுதாயம் ஒருதலை. Show all posts

Wednesday, February 13, 2013

காதல் கிறுக்கர்கள் பெருகிவிட்டார்-இளம் கன்னியர் பலரும் கருகிவிட்டார்!




கண்ணே  இழந்து  போனாலும்  -வாழக்
     கருதியே  உறுதியாய்  இருந்தவளே!
பெண்ணே  இறந்து  போனாயே  -காமப்
     பேயனால்  இந்நிலை  ஆனாயே!

காதல்  கிறுக்கர்கள்  பெருகிவிட்டார்-இளம்
    கன்னியர்  பலரும்   கருகிவிட்டார்!
வேதனை  நடப்பதே   நாடெங்கும் கண்ணீர்
   விடுவதா  பெற்றோர்  வீடெங்கும்!

பெற்றே  வளர்த்து  சீராட்டி கொஞ்சிப்
    பேசியே  நாளும்  பாராட்டி !
 கற்றே  உயர்ந்திடச்   செய்தாரே இன்று
     கண்ணீர்  மழையெனப்  பெய்தாரே!

அந்தோ இனியவர்   என்செய்வார் மன
   ஆறுதல்  எவ்வண்  அவரெய்வார்
வெந்தே  சாவது  தலைவிதியா! மேலும்
   விளம்பிட  வேறு    மதியிலையா!?

இருவர்  மாட்டு  ஏற்படுமே காதல்
   என்றால்  உண்மை  பொருள்படுமே
ஒருவர்  மாட்டு   தோன்றுவது என்றும்
    ஒருதலைக்  காதல்  எனப்படுமே!

வேண்டாம்  இந்த  விளையாட்டும் அதன்
   விளைவை  எடுத்தே  இதுகாட்டும்!
ஈண்டே   இதுவே  முடிவாக பாடம்
     இளையோர்   கற்றிட  விடிவாக!


               புலவர்  சா  இராமாநுசம்
   

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...