Saturday, April 13, 2013

இத்தரை மீதினில் சித்திரைப் பெண்ணே!



            இத்தரை மீதினில்

            சித்திரைப் பெண்ணே
            எத்தனை முறையம்மா வந்தாய்-நீ
            என்னென்ன புதுமைகள் தந்தாய்

            எண்ணிப் பதினொரு
            இன்னுயிர் தோழியர்
            நண்ணிப் புடைசூழப் பின்னே-நீ
            நடந்து வருவதும் என்னே

            ஆண்டுக் கொருமுறை
            மீண்டும் வருமுன்னை
            வேண்டுவார் பற்பல நன்மை-அது
            ஈண்டுள மக்களின் தன்மை

            இல்லாமை நீங்கிட
            ஏழ்மை மறந்திட
            வெள்ளாமைத் தந்திடு வாயே-உயிர்
            கொல்லாமைத் தந்திடு வாயே

            ஏரிக்குள மெல்லாம்
            எங்கும் நிரம்பிட
            வாரி வழங்கிடு வாயா-வான்
            மாரி வழங்கிடு வாயா

             புலவர் சா இராமாநுசம்

20 comments :

  1. வேண்டுதல் நடக்கட்டும் ஐயா...

    இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies

    1. வருகைக்கும் , வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  2. சித்திரைப் பெண்ணே
    எத்தனை முறையம்மா வந்தாய்-நீ
    என்னென்ன புதுமைகள் தந்தாய் ?///
    இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் , வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  3. சித்திரைப் பெண்ணை அழகாய் வர்ணித்து, வரவேற்று, அவளிடம் உலகு வாழப் பிரார்த்தனைகளை முன்வைத்த பாங்கு மனம் கொள்ளை கொள்கிறது. சித்திரைப் பெண்ணுக்கு வரவேற்பும் இனிய கவிதைக்குப் பாராட்டுகளும் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் , வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  4. வேண்டுதல் நிறைவேறட்டும்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் , வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  5. சகல நலங்களும், மகிழ்வும் நிறைய
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.




    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் , வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  6. மிக அழகாக சித்திரைத் தேவியை வர்ணித்து அற்புதமான கவிதந்திருக்கின்றீர்கள். ஒவ்வொருவரியும் கரும்பாக இனிக்கிறது ஐயா!

    வசந்தமுடன் வந்த சித்திரைப்பெண் எமக்கு வாழ்வில் அல்லல் நீங்கி சுபீட்சமான எதிகாலத்தை தந்திட வேண்டுவோம்.

    உங்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  7. அருமையான வேண்டுதல்! நல்லதே நடக்கட்டும்! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் , வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  8. சித்திரைப் பெண் வந்து நல்லவை தொடங்கட்டும்.இத்தரை செழிக்கட்டும் நன்றி ஐயா! தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. கவிதை அருமை...
    சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. தங்களின் வேண்டுதல் பலிக்கட்டும் அய்யா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் , வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  11. சித்திரைப் பெண்ணை வரவேற்று நீங்கள் படைத்த கவிதை மிக நன்று....

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. எனதினிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் .

    ReplyDelete
  13. தேவையான அளவு மாரி வழங்கட்டும்;வாரி வழங்கட்டும்! வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...