Saturday, January 20, 2018

கடந்த ஆண்டு மாணவர் நடத்திய அறப்போர்!



வரலாறு காணாத போராட்டம் கண்டீர் வருங்கால வரலாற்றில் தனியிடம் கொண்டீர்!

திரளான மாணவரின் பெருங்கூட்டம் தானே
திரட்டாத தன்னெழிச்சி வரநாட்டம் காணே
வரலாறு காணாத போராட்டம் கண்டீர்
வருங்கால வரலாற்றில் தனியிடம் கொண்டீர்
தரமான அறவழியே போராட்டம் போக
தம்நிகரும் இல்லையென அமைதிமிக ஆக
சரமாக மேன்மேலும் கூடுகின்றார் இங்கே
சரிசெய்ய முயலாத அரசுகளும் எங்கே?


புலவர் சா இராமாநுசம்

5 comments :

  1. மாணவர் போராட்டம் எதற்கு?

    ReplyDelete
  2. போராட்டம் வென்றதா ஐயா ?

    ReplyDelete
  3. கவிதை நன்று ஐயா...
    அரசே இல்லையே ஐயா... பின் எப்படி சரி செய்யும்.
    இது தமிழனின் சாபக்கேடு...
    காசுக்கு ஓட்டுப் போட்டுட்டு இப்ப வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறோம் எல்லாவற்றுக்கும்.

    ReplyDelete
  4. அனைவருக்கும் நன்றி

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...